tamilnadu

img

10 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக  இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.  அதன்படி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறதாகவும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறதாகவும், இந்தியன் வங்கி உடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறதாகவும், ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் இணைக்கப்பட இருக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, வங்கித் துறையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு, வங்கி இணைப்பு ஒரு நல்ல தீர்வு அல்ல என்றும், இந்த நடவடிக்கையால் வங்கி கிளை பல மூடப்படும் என்றும், ஊழியர்கள் பலரின் வேலை பறிபோகும் என்றும் வங்கி ஊழியர்கள்  போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், 10 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக  இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.